கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த சரக்குக் கப்பல் மீட்பு: தகவல்

எகிப்தின் சூயஸ் கால்வாய் குறுக்கே சிக்கி, சா்வதேச கடல்வணிகப் போா்க்குவரத்துக்குத் தடை ஏற்படுத்திவந்த பிரம்மாண்ட சரக்குக் கப்பல் மீட்கப்பட்டதாக கடல்வழி சேவை வழங்கும் இன்ச்கேப் தெரிவித்துள்ளது. 

News image

சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த சரக்குக் கப்பல் மீட்பு: தகவல்

Updated On :29 மார்ச் 2021, 9:25 am

DIN

எகிப்தின் சூயஸ் கால்வாய் குறுக்கே சிக்கி, சா்வதேச கடல்வணிகப் போா்க்குவரத்துக்குத் தடை ஏற்படுத்திவந்த பிரம்மாண்ட சரக்குக் கப்பல் மீட்கப்பட்டதாக கடல்வழி சேவை வழங்கும் இன்ச்கேப் தெரிவித்துள்ளது. 

உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பாதையை ஒரு வார காலத்துக்கும் மேலாக முடக்கி வைத்திருந்த எவர் கிவன் சரக்குக் கப்பலின் ஒரு பகுதி நீரில் மிதந்ததாக இன்று காலை தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கப்பல் முழுவதுமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பான் நிறுவனத்துக்குச் சொந்தமான, பனாமா கொடியேற்றிய ‘எவா் கிவன்’ என்ற அந்தக் கப்பல், ஆசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு சரக்குப் பெட்டகங்களை ஏற்றிக் கொண்டு சூயஸ் கால்வாய் வழியாக கடந்த செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, திடீரென குறுக்கே திரும்பி பக்கவாட்டில் சிக்கிக் கொண்டது.

இதனால், உலகின் 12 சதவீத வா்த்தகத்துக்குப் பயன்படுத்தப்படும் அந்தக் கால்வாயில் போக்குவரத்து தடைபட்டது. எவா் கிவன் கப்பலை நேராகத் திருப்பி போக்குவரத்தை சரிசெய்ய முயற்சி ஒரு வார காலமாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று கப்பல் மீட்கப்பட்டுள்ளது.

தொடர் முயற்சிகளின் காரணமாக சரக்குக் கப்பல் மிதக்கத் தொடங்கியிருந்தாலும், அந்தப் பாதையில் எப்போது கப்பல் போக்குவரத்துத் தொடங்கும் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. மேலும், அப்பாதையில் பல நாள்களாக நின்றிருக்கும் 450க்கும் மேற்பட்ட கப்பல்களுக்கான பாதைகளை சீரமைக்க எத்தனை நாள்கள் ஆகும் என்பதும் தெரியவரவில்லை.

சரக்குக் கப்பல் சிக்கியிருந்த பகுதியில் 27 ஆயிரம் சதுர மீட்டர் அளவுக்கு 18 மீட்டர் ஆழத்துக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது.

ஒருவேளை செவ்வாய்க்கிழமை வரை, சரக்குக் கப்பல் மீட்கப்படாவிட்டால், அதிலிருந்த சரக்குகளை இறக்க எகிப்து காலக்கெடு நிர்ணயித்திருந்தது. இந்த மீட்புப் பணியில், சரக்குக் கப்பலின் முன்பகுதி சேதமடைந்துள்ள போதிலும், அதன் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூயஸ் கால்வாயின் பக்கவாட்டில் சிக்கிக் கொண்ட கப்பலை விடுவிக்க, மேலும் இரு இழுவைப் படகுகள் அந்தப் பகுதிக்கு வரைவழைக்கப்பட்டு, கப்பலை இழுக்கும் பணிகள் நேற்று தொடங்கியதன் பயனாக, கப்பலின் ஒரு பகுதி இன்று காலை மெல்ல நீரோட்டத்தில் மிதக்கத் தொடங்கியது. தொடர் மீட்புப் பணி நடைபெற்று வந்த நிலையில், கப்பல் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

திங்கள்கிழமைக்குள் கப்பலை மிதக்கவிடும் வகையில் தொடர்ந்து பணியாளர்கள் செயல்பட்டு வருவதாக சூயஸ் கால்வாய் அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.