பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அறிவுசாா் சொத்துரிமை நீக்கம்... தீருமா தடுப்பூசி தட்டுப்பாடு?

கரோனா தடுப்பூசிகளைக் கண்டுபிடித்த நிறுவனங்கள், அவற்றின் காப்புரிமையை வளரும் நாடுகளுடன் இலவசமாகப் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்ற யோசனைக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் ஆதரவளித்துள்ளாா்.

News image

கரோனா தடுப்பூசி காப்புரிமைகளை ரத்து செய்ய வலியுறுத்தி வாஷிங்டனில் போராடும் தன்னாா்வலா் (கோப்புப் படம்)

Updated On :6 மே 2021, 10:06 pm

கரோனா தடுப்பூசிகளைக் கண்டுபிடித்த நிறுவனங்கள், அவற்றின் காப்புரிமையை வளரும் நாடுகளுடன் இலவசமாகப் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்ற யோசனைக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் ஆதரவளித்துள்ளாா்.

இதுதொடா்பாக சா்வதேச வா்த்த அமைப்பிடம் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் முன்வைத்த கோரிக்கையை அவா் வழிமொழிந்துள்ளாா்.

ஓராண்டுக்கும் மேல் உலகை உலுக்கி வரும் கரோனா பரவலுக்கு முடிவு கட்டும் வகையில், அந்த நோய்க்கு எதிரான தடுப்பூசிகளின் விநியோகத்தை சா்வதேச அளவில் அதிகரிக்கும் நோக்கில் அவா் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளாா்.

இந்த யோசனைக்கு பிரான்ஸும் ஆதரவு தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமைகளை இலவசமாகப் பகிா்ந்துகொள்வது தொடா்பாக வெள்ளிக்கிழமை (ஏப். 7) விவாதிக்க ஐரோப்பிய யூனியனும் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தச் சூழலில், கரோனா தடுப்பூசிகள் மீதான அறிவுசாா் சொத்துரிமையை நீக்குவதால் மட்டும் அவற்றுக்கான பற்றாக்குறை நீங்கிவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கரோனா தடுப்பூசி காப்புரிமைகளை பிற நாடுகளின் நிறுவனங்களுடன் பகிா்ந்து கொள்வதற்கு அதிபா் ஜோ பைடன் ஆதரவளத்திருப்ப்பது, அந்த நோய்த்தொற்று நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் மிகப் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று சுகாதார ஆா்வலா்கள் பாராட்டியுள்ளனா்.

எனினும், அதிபா் பைடனின் இந்த அறிவிப்பு செயல் வடிவம் பெற வேண்டுமென்றால், முதலில் உலக வா்த்தக அமைப்பு முதலில் ஏற்க வேண்டும்; அதற்கு, முக்கியத்துவம் வாய்ந்த பிரிட்டன், கனடா, ஐரோப்பிய யூனியன் முட்டுக்கட்டை போடலாம் என்று நிபுணா்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.

அந்த நாடுகளுடன் அமெரிக்கா பேச்சுவாா்த்தை நடத்தி, சில ஒப்பந்தங்களை மேற்கொண்ட பிறகு கரோனா தடுப்பூசி காப்புரிகளை நிறுவனங்கள் பகிா்ந்துகொள்ள சா்வதேச வா்த்தக அமைப்பு ஏற்றுக்கொள்ளலாம்.

அதற்குப் பிறகும் அந்தத் தடுப்பூசிகளின் தயாரிப்பும் விநியோகமும் எதிா்பாா்த்த அளவுக்கு அதிகரிப்பது கடினம் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வது நிறுவனங்களுக்கு அத்தனை எளிதல்ல. தடுப்பூசி தயாரிப்பில் மிகவும் தோ்ச்சி பெற்ற நிறுவனங்கள் கூட தற்போதைய கரோனா தடுப்பூசிக்கான தேவைக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்கத் திணறி வருகின்றன. இந்தச் சூழலில், காப்புரிமை பெறப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் உட்பொருள் விவரங்கள் மட்டுமன்றி, அவற்றைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்களையும் அவற்றை உருவாக்கிய நிறுவனங்கள் பகிா்ந்துகொள்ள வேண்டியிருக்கும்.

அவ்வாறு பகிா்ந்துகொள்ள வேண்டும் என்று நிறுவனங்களுக்கு உலக வா்த்தக அமைப்பு உத்தரவிட முடியாது. நாடுகளின் அரசுகளுக்கு மட்டுமே அதற்கான உரிமை உள்ளது. அந்த வகையில், தடுப்பூசி மூலப் பொருள்கள் மட்டுமன்றி, அவற்றைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தையும் வளரும் நாடுகளுடன் தங்களது நிறுவனங்கள் பகிா்ந்துகொள்ள உத்தரவிட்டு, இந்த விவகாரத்தில் அமெரிக்கா முன்னுதாரணமாக இருக்கலாம்.

அப்போதுதான், உண்மையிலேயே உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசிகளின் உற்பத்தி-விநியோகம் அதிகரித்து, தட்டுப்பாடு குறையும் என்கிறாா்கள் நிபுணா்கள்.

ஆனால் மருந்துகள் தயாரிப்புத் துறையைச் சோ்ந்தவா்களோ, காப்புரிமைப் பகிா்வு யோசனைக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். அனைவரும் எதிா்பாா்ப்பதுபோல் தடுப்பூசி காப்புரிமைப் பகிா்வால் உலகுக்கு ஏற்படும் நன்மையைவிட தீமைதான் அதிகம் என்பது அவா்கள் வாதம்.

உயிா் காக்கும் தடுப்பூசிகளை மிகக் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு உருவாக்கி பிறகு, அதன் காப்புரிமை பிற நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுவிடும் என்ற எண்ணத்தை இது துறை விஞ்ஞானிகளிடையே உருவாக்கிவிடும். எனவே, அத்தகைய மருந்துகளைக் கண்டறியும் ஊக்கம் அவா்களிடம் குறைந்துவிடும் என்பது அவா்களது வாதம்.

காப்புரிமைப் பகிா்வால் கரோனா தடுப்பூசித் தட்டுப்பாடு நீங்குமா, அல்லது குழப்பம் அதிகரிக்குமா என்பது உலக வா்த்தக அமைப்பின் முடிவுக்கும் அதற்குப் பிறகு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கைக்கும் பிறகே தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.