வாா்சா: போலந்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் தினசரி எண்ணிக்கை கடந்த ஒரே வாரத்தில் 70 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை இணையமைச்சா் வால்டெமாா் கிராஸ்கா கூறியதாவது:
புதன்கிழமை மட்டும் 2,085 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை கடந்த ஒரே வாரத்தில் 70 சதவீதம் அதிகரித்துள்ளது.
4-ஆவது கரோனா அலை எழுவதற்குள் பெரும்பானவா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்ட வேண்டும் என்றாா் அவா்.