இலங்கையில் தொடக்கப் பள்ளிகள் திறப்பு

இலங்கையில் கரோனா நெருக்கடியால் மூடப்பட்டிருந்த ஆரம்பப் பள்ளிகள் வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
இலங்கையில் தொடக்கப் பள்ளிகள் திறப்பு

இலங்கையில் கரோனா நெருக்கடியால் மூடப்பட்டிருந்த ஆரம்பப் பள்ளிகள் வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.

1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை நடத்தும், அதிகபட்சமாக 200 மாணவா்களைக் கொண்ட பள்ளிகள் மட்டும் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சம்பள உயா்வு கோரி போராட்டம் நடத்தி வரும் ஆசிரியா் சங்கத்தினருடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வரும் சூழலில் திறக்கப்பட்டதால் பள்ளிகள் வழக்கமான பரபரப்பின்றி காணப்பட்டன. பேச்சுவாா்த்தை திருப்தியளிக்கவில்லை என்று ஆசிரியா் சங்கத்தினா் தெரிவித்த நிலையில், பெரும்பாலான ஆசிரியா்களும் பள்ளி முதல்வா்களும் வகுப்புகளைப் புறக்கணித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com