திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

சிங்கப்பூரில் அதிகரிக்கும் கரோனா: கட்டுப்பாடுகள் விதிப்பு

சிங்கப்பூரில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து வரும் வாரம் முதல் அங்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. 

News image

கோப்புப்படம்

Updated On :24 செப்டம்பர் 2021, 12:35 pm

DIN

சிங்கப்பூரில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து வரும் வாரம் முதல் அங்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. 

கரோனா மூன்றாவது அலை காரணமாக சில நாடுகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

இதனால் அடுத்த வாரம் முதல் சில கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. மக்கள் பொது இடங்களில் கூடாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சமூக கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. 

அதேநேரத்தில் அங்கு நகரங்களில் தடுப்பூசி செலுத்துவதும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. 50 முதல் 59 வயதுடையவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.