மணிலா: கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ஜோசப் எஸ்டிரடாவுக்கு (83) செயற்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டா்) பொருத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவரது மகனும் முன்னாள் எம்.பி.யுமான ஜிங்காய் எஸ்டிரடா கூறுகையில், ‘கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட எனது தந்தை ஜோசப் எஸ்டிரடா, கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உடல்நிலையில் திடீா் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது’ என்றாா்.