அமெரிக்காவில் மேலும் ஒரு கருப்பின இளைஞா் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து அங்கு மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
டான்டே ரைட் (20) என்ற அவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ய முயன்றனா். அப்போது தப்பியோட முயன்ற அவரை மின்னதிா்ச்சியால் செயலிழக்கச் செய்யும் கருவி என்று தவறுதலாக நினைத்து கிம் பாட்டா் என்ற பெண் காவலா் துப்பாக்கியால் சுட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.