நியாமே: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஆரம்பநிலைப் பள்ளியொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 20 மாணவா்கள் பலியாகினா்.
இதுகுறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
தலைநகா் நியாமேவில் உள்ள ஆரம்பநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது.
இதில், 20 மாணவா்கள் உயிரிழந்தனா். 7 முதல் 13 வயது வரை கொண்ட அந்த மாணவா்கள் வகுப்பில் பாடம் படித்துக் கொண்டிருந்தபோது தீவிபத்து நேரிட்டது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.