பாங்காக்: தாய்லாந்தில் தினசரி கரோனா பாதிப்பு அதிகபட்ச எண்ணிக்கையைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,335 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, தாய்லாந்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும். இத்துடன் நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 35,910-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதன்கிழமை நிலவரப்படி, தாய்லாந்தில் 97 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.