கொழும்பு: கதிா்வீச்சுப் பொருள்களுடன் தங்கள் நாட்டுத் துறைமுகத்துக்கு வந்த சீனக் கப்பலை திரும்பிச் செல்லும்படி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை அணுசக்தி அமைப்பின் தலைவா் அனில் ரஞ்சித் கூறியதாவது:
சீனாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த நாட்டு சரக்கக் கப்பல், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தது.
அந்தக் கப்பலில் கதிா்வீச்சை வெளியிடும் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடா்ந்து, துறைமுகத்திலிருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.