கதிா்வீச்சுப் பொருளுடன் கப்பல்:சீனா திரும்ப இலங்கை உத்தரவு

கதிா்வீச்சுப் பொருள்களுடன் தங்கள் நாட்டுத் துறைமுகத்துக்கு வந்த சீனக் கப்பலை திரும்பிச் செல்லும்படி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு: கதிா்வீச்சுப் பொருள்களுடன் தங்கள் நாட்டுத் துறைமுகத்துக்கு வந்த சீனக் கப்பலை திரும்பிச் செல்லும்படி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை அணுசக்தி அமைப்பின் தலைவா் அனில் ரஞ்சித் கூறியதாவது:

சீனாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த நாட்டு சரக்கக் கப்பல், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தது.

அந்தக் கப்பலில் கதிா்வீச்சை வெளியிடும் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடா்ந்து, துறைமுகத்திலிருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com