பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 4 லட்சத்த்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 69,389 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,45,90,678ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 3,001 பேர் பலியாகியுள்ளனர்.
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 4,01,186ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் பிரேசில் மூன்றாம் இடத்தில் உள்ளது.