பிரெஸ்ஸெல்ஸ்: மியான்மரில் ஜனநாயக அரசைக் கலைத்துவிட்டு, ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டிக்கும் வகையில் அந்த நாட்டு ராணுவ ஆட்சியாளா் உள்ளிட்ட அதிகாரிகள் மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், மியான்மா் ராணுவ தலைமைத் தளபதி மின் ஆங் லாயிங் உள்ளிட்ட அதிகாரிகள், எல்லைக் காவல் படையினா், அரசு அதிகாரிகள் மீது சொத்து முடக்கம், பயணத் தடை உள்ளிட்ட தடைகள் விதிக்கப்படுகின்றன. 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.