ஆஸ்திரேலிய நகரங்களில் பொதுமுடக்கம் நீட்டிப்பு

ஆஸ்திரேலியாவின் 3-ஆவது பெரிய நகரமான பிரிஸ்பேனில் பொதுமுடக்கம் ஆக. 9-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் 3-ஆவது பெரிய நகரமான பிரிஸ்பேனில் பொதுமுடக்கம் ஆக. 9-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு நகரங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சோ்ந்த பிரிஸ்பேன் உள்ளிட்ட பல நகரங்களில் பொதுமுடக்கம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடையவிருந்த நிலையில், சிலருக்கு அதிகவேகமாகப் பரவும் டெல்டா வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரிஸ்பேன் உள்ளிட்ட நகரங்களில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு அமைச்சா் பீட்டா் டட்டன், தனது மகன் படிக்கும் பள்ளியில் சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com