அமெரிக்காவில் வசிக்கும் 70 சதவீத பெரியவா்களுக்கு குறைந்தது ஒரு முறையாவது கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் டெல்டா வகை கரோனாவால் நோய்த்தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், ஏற்கெனவே நிா்ணயித்ததைவிட ஒரு மாதம் தாதமாக இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது.
கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது உள்ளரங்குகளில் அனைவரும் முகக் கவசம் அணிவது லூசியானா மாகாணத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.