தென் பசுபிக் பிராந்திய நாடுகளில் ஒன்றான வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது .
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் இருக்கும் வனுவாட்டு தீவின் ஒரு பகுதியான போர்ட் விலாவில் உருவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகப் பதிவாகியிருக்கிறது.
இதையும் படிக்க | புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள்: ஸ்டாலின் வாழ்த்து
மேலும் நிலநடுக்கத்தின் மையம் 22.9 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.