துருக்கியில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட பேருந்து விபத்தில் 14 போ் பலியாகினா்.
அந்த நாட்டின் பாலிகேசிா் மாகாண நெடுஞ்சாலையில் பயணிகளுடன் அந்தப் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது சாலையோரச் சரிவில் உருண்டு விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே 11 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி 3 பேரும் உயிரிழந்தனா்.
விபத்தில் காயமடைந்த 18 போ் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.