உலகிலேயே மிகவும் குள்ளமான பசு என்று அறியப்பட்ட ராணி பசு உடல்நலக் கோளாறால் பலியானது.
வங்கதேசத்தின் சாவர் பகுதியில் பராமரிக்கப்பட்டு வந்த ராணி பசு, உலகிலேயே மிகவும் குள்ளமான பசு என்று அறியப்பட்டது. இது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பித்து, அங்கீகாரத்துக்காக காத்திருந்த நிலையில் மரணமடைந்துள்ளது.
வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான வாயு சேர்ந்ததால், ராணி பசு மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இது 20 செ.மீ. உயரமும், 68 செ.மீ. நீளமும் கொண்டிருந்தது. இதன் ஒட்டுமொத்த எடை 28 கிலோவாக இருந்தது.