நியூசிலாந்தில் கெர்மடெக் தீவுப் பகுதியில் இன்று (ஆக-31) அதிகாலை 2.55 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவான நிலநடுக்கம் கெர்மடெக் பகுதியில் 40 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.
இந்த திடீர் நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியத்துடன் பலர் சாலைகளில் ஓட ஆரம்பித்தனர். சில கட்டடங்கள் சேதாரமானதுடன் சாலைகளில் பிளவும் ஏற்பட்டது.
மேலும் உயிரிழப்பு ஏதாவது ஏற்பட்டதா என்கிற தகவல் எதுவும் வெளியாகவில்லை.