லெபனானில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 1,153 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,00,451-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 4 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 8,044-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
திங்கள்கிழமை நிலவரப்படி, லெபனானில் 551,433 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 40,974 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.