பிரான்ஸில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 12 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 133 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். அதையடுத்து, நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,20,032-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, நாட்டில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 80 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 61,340 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 80,48,931-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.