போலந்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 90 ஆயிரத்தைக் கடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 592 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். அதையடுத்து, நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 90,306-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, புதிதாக 22,097 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இத்துடன், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39,03,445-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
போலந்தில் இதுவரை33,61,528 போ் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 451,611 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.