நைஜீரியா: துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் பலி

நைஜீரியாவில் உள்ள கதுனா மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் உயிரிழந்தனர். 
நைஜீரியா: துப்பாக்கிச் சூட்டில் 43 பேர் பலி
நைஜீரியா: துப்பாக்கிச் சூட்டில் 43 பேர் பலி

நைஜீரியாவில் உள்ள கதுனா மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் உயிரிழந்தனர். 

சமீப காலமாக நைஜீரியாவில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்களும் ஆள் கடத்தலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று கதுனா மாகாணத்தைச் சேர்ந்த இதுசு , கிவா உள்ளிட்ட சில கிராமத்தில் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அம்மாகாண அரசு தெரிவித்திருக்கிறது.

மேலும் நேற்று (டிச.19) கிவா பகுதியில் துப்பாக்கிகளுடன் நுழைந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள் 20 பேரை சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com