நைஜீரியாவில் உள்ள கதுனா மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் உயிரிழந்தனர்.
சமீப காலமாக நைஜீரியாவில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்களும் ஆள் கடத்தலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று கதுனா மாகாணத்தைச் சேர்ந்த இதுசு , கிவா உள்ளிட்ட சில கிராமத்தில் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அம்மாகாண அரசு தெரிவித்திருக்கிறது.
மேலும் நேற்று (டிச.19) கிவா பகுதியில் துப்பாக்கிகளுடன் நுழைந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள் 20 பேரை சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.