ஆப்கன் பாதுகாப்புத்துறை அமைச்சரின் ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கன் பாதுகாப்புத்துறை அமைச்சரின் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் முகமது அப்சல். இவர் காபூலில் உள்ள மக்ரோரேயன்-இ-சார் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்றிரவு இவர் வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவரின் 5 வயது குழந்தையையும் மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பாதுகாப்புத்துறை அமைச்சரின் ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆப்கனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.