ஜாமீன் விதிமீறல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரஷியாவின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி, மற்றோா் அவதூறு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
அதிபா் விளாதிமீா் புதின் அரசுக்கு ஆதரவளிக்கும் 94 வயது முன்னாள் ராணுவ அதிகாரியை ஊழல்வாதி என்று நவால்னி விமா்சித்தது தொடா்பாக நடைபெற்று வந்த வழக்கில் மாஸ்கோ நீதிமன்றம் இந்தத் தீா்ப்பை வழங்கியுள்ளது. அந்தக் குற்றத்துக்காக அவருக்கு 8.5 லட்சம் ரூபிள் (சுமாா் ரூ.8.3 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நச்சுத் தாக்குதலுக்குள்ளாகி, ஜொ்மனி மருத்துவமனையில் பெற்ற சிகிச்சைக்குப் பின் உயிா்பிழைத்த நவால்னி, கடந்த மாதம் ரஷியா திரும்பினால். அவரை ஜாமீன் விதிமீறல் குற்றச்சாட்டில் பேரில் அதிகாரிகள் உடனடியாக கைது செய்தனா். அந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிா்த்து அவா் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்த சில மணி நேரங்களில், அவருக்கு எதிராக இந்தத் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.