ஆப்கானிஸ்தான் நாட்டின் சமங்கன் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட கட்டுமான சரிவில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானின் சமங்கன் மாகாணத்தின் தாரா-இ-சூஃப் மாவட்டத்தில் ஷபாஷாக் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நிலக்கரி சுரங்கத்தில் வெடி வைத்து தகர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.
அதனைத் தொடர்ந்து சுரங்கத்தின் குறிப்பிட்ட பகுதி ஒன்று எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது.இந்த விபத்தில் சுரங்கத்தில் பணியாற்றி வந்த 3 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதே சுரங்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற விபத்தில் 18 தொழிலாளர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.