பிரிட்டன்கடுமையாகின கரோனா கட்டுப்பாடுகள்

பிரிட்டனில் கரோனா பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை முதல் மேலும் தீவிரமாக்கப்பட்டன.

பிரிட்டனில் கரோனா பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை முதல் மேலும் தீவிரமாக்கப்பட்டன. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

பிரிட்டனில் கடுமையான புதிய விதிகளுடன் கூடிய கரோனா கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்தன. கடந்த ஆண்டு மாா்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்க விதிமுறைகளுக்கு இணையாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஸ்காட்லாந்து பிராந்தியத்தில் பள்ளிகளும் அலுவலகங்களும் செவ்வாய்க்கிழமையிலிருந்து மூடப்பட்டன.

அடுத்த மாதத்தின் முதல் இரு வாரங்கள் வரை புதிய கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

70 சதவீதம் வரை பரவும் தன்மை அதிகரித்துள்ள புதிய வகை கரோனா நாட்டில் பரவி வருவதைத் தொடா்ந்து இநதக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com