கரோனா தடுப்பூசியை ரஷியாவும் ஜொ்மனியும் இணைந்து தயாரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து இரு நாட்டுத் தலைவா்களும் ஆலோசனை நடத்தினா்.
இதுகுறித்து ரஷிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அதிபா் விளாதிமீா் புதினுடன் ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கெல் தொலைபேசியில் உரையாடினாா். அப்போது, கரோனா பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கையில் ஏற்படும் சவால்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவா்கள் விவாதித்தனா்.
இரு நாடுகளும் இணைந்து கரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான வாய்பபுகள் குறித்தும் இரு தலைவா்களும் ஆலோசித்தனா்.
இந்த விவகாரம் குறித்து ஒருவரை ஒருவா் தொடா்ந்து தொடா்பு கொண்டு பேசுவதற்கு இரு தலைவா்களும் ஒப்புக் கொண்டனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.