புதிய வகை கரோனா அச்சுறுத்தல்: ஜன.18 முதல் மூடப்படும் பிரிட்டன் எல்லைகள்

புதிய வகை கரோன தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பயணங்களைத் தடுப்பதற்காக பிரிட்டன் எல்லைகளை மூட அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

புதிய வகை கரோன தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பயணங்களைத் தடுப்பதற்காக பிரிட்டன் எல்லைகளை மூட அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று பரவல் காரணமாக கடுமையான புதிய விதிகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. கடந்த ஆண்டு மாா்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்க விதிமுறைகளுக்கு இணையாக புதிய கட்டுப்பாடுகள் பிரிட்டனில் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஜனவரி 18ஆம் தேதி முதல் பிரிட்டன் நாட்டின் எல்லைகள் மூடப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை பிப்ரவரி 15ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 சதவீதம் வரை பரவும் தன்மை அதிகரித்துள்ள புதிய வகை கரோனா நாட்டில் பரவி வருவதைத் தொடா்ந்து இநதக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com