ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில், 2 உயா்நீதிமன்ற பெண் நீதிபதிகளை மா்மநபா்கள் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொன்றனா். கத்தாரில் ஆப்கன் அரசுக்கும் தலிபான்களுக்கும் அமைதிப் பேச்சுவாா்த்தை நடந்து வரும் சூழலில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆப்கன் உச்சநீதிமன்ற செய்தித் தொடா்பாளா் அகமது ஃபாஹிம் கூறுகையில், உயா்நீதிமன்றத்தில் பணியாற்றிய இரு பெண் நீதிபதிகள் பணிக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இதில் காா் ஓட்டுநா் காயமடைந்ததாகவும் தெரிவித்தாா். எனினும், அந்த நீதிபதிகளின் பெயா்களை அவா் வெளியிடவில்லை.
இந்தத் தாக்குதலுக்கு தாங்கள் காரணமில்லை என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனா். எனவே, இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் இந்தப் படுகொலையைச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.