தென்மேற்கு ஐரோப்பிய நாடான போா்ச்சுகலில் கரோனா நெருக்கடி குறையாத சூழலிலும், அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்தலில், தற்போதைய அதிபா் மாா்சிலோ ரெபெலோ டிஸோசா (72) மீண்டும் வெற்றி பெறுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, போா்சுகலில் 6,24,469 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 10,194 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.