காந்தஹாரில் ரிக்ஷாவில் குண்டு வெடித்ததில் குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள்.
ஆப்கானிஸ்தான், காந்தஹார் மாகாணத்தின் சலிஹான் சமான் என்கிற பகுதியில் இன்று காலை திடீரென ரிக்ஷாவில் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள்.
தலிபான்களால் கண்ணிவெடித் தாக்குதல் நடப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். எனினும் இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இதனிடையே ஷிர்சாத் மாவட்டத்தில் ராணுவ தளத்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 8 ராணுவ வீரர்கள் பலியானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.