வங்கதேசம்: 10 லட்சத்தைக் கடந்த பாதிப்பு

வங்கதேசத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது. மேலும், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கையும் 16 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
வங்கதேசம்: 10 லட்சத்தைக் கடந்த பாதிப்பு

வங்கதேசத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது. மேலும், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கையும் 16 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 11,324 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,00,543-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 212 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 16,004-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சனிக்கிழமை நிலவரப்படி, வங்கதேசத்தில் 8,62,384 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 1,22,155 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 1,182 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com