சாங்காய்: கிழக்குச் சீன பகுதியில் சேர்ந்த சுஹாவ் நகரில் அமைந்திருக்கும் தங்கும் விடுதி நேற்று ( செவ்வாய்கிழமை ) மாலை திடீரென இடிந்து விழுந்தது. அறையில் தங்கியிருந்தவர்கள் , உணவு அருந்திக்கொண்டிருந்தவர்கள் என 23 பேர் இடிபாடுகளில் மாட்டிக்கொண்டனர்.
பின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க மேற்கொண்ட பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் இதுவரை 17 பேர் வரை உயிரிழந்ததாகவும் , 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கட்டடம் எந்தக் காரணத்தால் இடிந்து விழுந்தது என விசாரணை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகிகள் தரப்பிலிருந்து கூறப்பட்டிருக்கிறது.