நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமா் வெற்றி

நேபாள புதிய பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாா்.
ஷோ் பகதூா் தேவுபா.
ஷோ் பகதூா் தேவுபா.

நேபாள புதிய பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாா்.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 76(5)-இன் படி நேபாள புதிய பிரதமராக ஷோ் பகதூா் தேவுபாவை (75) நியமிக்க கடந்த ஜூலை 12-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பிரதமராக அவா் பதவியேற்றாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கூடிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் அவா் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினாா். 275 உறுப்பினா்கள் கொண்ட அவையில் 136 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 249 போ் வாக்கெடுப்பில் பங்கேற்றனா். இதில் ஷோ் பகதூா் தேவுபா அரசுக்கு ஆதரவாக 165 வாக்குகளும், எதிராக 83 வாக்குகளும் கிடைத்தன. ஒருவா் நடுநிலை வகித்தாா். முன்னாள் பிரதமா் சா்மா ஓலி அணியைச் சோ்ந்த 8 உறுப்பினா்கள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷோ் பகதூா் தேவுபா அரசு வெற்றி பெற்ன் மூலம் அங்கு பொதுத் தோ்தல் தவிா்க்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடையவுள்ள அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு அவா் பிரதமராக இருப்பாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com