தென் கொரியா: தினசரி பாதிப்பு புதிய உச்சம்

தென் கொரியாவில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
தென் கொரியா: தினசரி பாதிப்பு புதிய உச்சம்

தென் கொரியாவில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,784 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, கரோனா பரவல் தொடங்கிய நாளிலிருந்து இதுவரை காணப்படாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். இத்துடன், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,82,265-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2 வாரங்களாகவே நாட்டின் தினசரி கரோனா தொற்று ஆயிரத்தைக் கடந்து வருகிறது. மந்தமாக செயல்படுத்தப்பட்டு வரும் கரோனா தடுப்பூசி திட்டங்கள், மக்களிடையே காணப்படும் அலட்சியம், வேகமாகத் தொற்றும் தன்மை கொண்ட டெல்டா வகைக் கரோனா பரவி வருவது போன்ற காரணங்களால் அங்கு தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

புதன்கிழமை நிலவரப்படி, தென் கொரியாவில் 2,060 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com