இந்தோனேசியாவில் கரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை வெள்ளிக்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 1,566 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும்.
இதுதவிர, புதிதாக 49,071 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 30,82,410-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, இந்தோனேசியாவில் 80,598 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.