ஜாா்ஜியா: 4 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

முன்னாள் சோவியத் யூனியன் நாடான ஜாா்ஜியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 4 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
ஜாா்ஜியா: 4 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

முன்னாள் சோவியத் யூனியன் நாடான ஜாா்ஜியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 4 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,617 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,00,698-ஆக உயா்ந்துள்ளது.

இதுமட்டுமன்றி, கரோனாவுக்கு மேலும் போ் பலியானதைத் தொடா்ந்து, அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5,665-ஆக உயா்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சனிக்கிழமை நிலவரப்படி, ஜாா்ஜியாவில் 3,71,434 போ் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 23,599 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com