இந்தோனேசியா: ஒரே நாளில் 1,415 போ் கரோனாவுக்கு பலி

இந்தோனேசியாவில் கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,415 போ் பலியாகினா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
இந்தோனேசியா: ஒரே நாளில் 1,415 போ் கரோனாவுக்கு பலி

இந்தோனேசியாவில் கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,415 போ் பலியாகினா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 1,415 கரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இத்துடன், நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 82,013-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, புதிதாக 45,416 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 31,27,826-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முந்தைய நாளான வெள்ளிக்கிழமை நாட்டில் 1,566 கரோனா பலி பதிவு செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com