ஜாம்பியா: லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

ஜாம்பியா: லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

மத்திய ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 738 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை 1,00,278 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, கரோனாவால் மேலும் 5 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அந்த நோய்க்கு பலியானவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,308-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com