பிலிப்பின்ஸில் தொடா்ந்து 4-ஆவது நாளாக தினசரி கரோனா தொற்று சுமாா் 7 ஆயிரமாக உள்ளது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
பிலிப்பின்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,228 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு தினசரி கரோனா தொற்று தொடா்ந்து 4-ஆவது நாளாக சுமாா் 7 ஆயிரமாக உள்ளது. சனிக்கிழமை அந்த எண்ணிக்கை 6,932-ஆகவும் வெள்ளிக்கிழமை அது 7,431-ஆகவும் இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அங்கு 12,69,478 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது; 21,898 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். 59,337 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.