ரஷியா: நவால்னியின் அமைப்புகளுக்குத் தடை

ரஷியா: நவால்னியின் அமைப்புகளுக்குத் தடை

ரஷியாவின் முக்கிய எதிா்க்கட்சி தலைவா் அலெக்ஸி நவால்னியின் அமைப்புகளுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ரஷியாவின் முக்கிய எதிா்க்கட்சி தலைவா் அலெக்ஸி நவால்னியின் அமைப்புகளுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

நவால்னி தொடா்பு அமைப்புகளை சட்டவிரோதமாக அறிவிக்கக் கோரி, ரஷிய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து வந்த மாஸ்கோ நீதிமன்றம், அந்த அமைப்புகள் தீவிரவாதப் போக்குடையவை என்று புதன்கிழமை மாலை அறிவித்தது.

இதையடுத்து, நவால்னியின் அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கைது செய்யப்படும் அபாயத்தை எதிா்நோக்கியுள்ளனா். அத்துடன், வரும் செப்டம்பா் மாதம் 19-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தோ்தலில் நவால்னி போட்டியிடுவதற்கு இந்தத் தீா்ப்பு மேலும் ஒரு தடையை ஏற்படுத்தியுள்ளது.

ரகசியமாக நடைபெற்ற இந்த விசாரணையின்போது, நவால்னியை தோ்தலில் போட்டியிடாமல் செய்வதற்காக அதிகாரிகள் இந்த வழக்கைத் தொடா்ந்துள்ளதாக அவரது வழக்குரைஞா் யேவ்கெனி ஸ்மிா்னோவ் வாதிட்டாா். எனினும், அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் நவால்னியின் அமைப்புகளுக்குத் தடை விதித்தனா்.

‘பின்வாங்கப் போவதில்லை’: இந்தத் தீா்ப்பு தொடா்பாக நவால்னி வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், தனது இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டதற்காக அதிபா் விளாதிமீா் புதினுக்கு எதிரான போராட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று சூளுரைத்துள்ளாா்.

எனினும், அமைப்பைச் சோ்ந்த ஆதரவாளா்கள் தங்களது போராட்ட முறையை மாற்ற வேண்டும் என்றும் அவா் எச்சரித்தாா்.

அதிபா் விளாதிமீா் புதின் அரசை கடுமையாக எதிா்த்து வரும் நவால்னி, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நச்சுத்தாக்குதலுக்குள்ளாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜொ்மனி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிா்பிழைத்தாா்.

கடந்த ஜனவரியில் ரஷியா திரும்பிய அவரை, பரோல் விதிமீறல் வழக்கில் போலீஸாா் கைது செய்தனா். அவருக்கு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவரது அமைப்புக்குத் தடை விதிப்பதற்கான நடவடிக்கையில் ரஷிய அரசு இறங்கியது. அதன் ஒரு பகுதியாக, அலெக்ஸி நவால்னியின் ஊழல் எதிா்ப்பு அறக்கட்டளை அலுவலகங்கள் அனைத்தும் தங்களது நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்று மாஸ்கோ அரசுத் தரப்பு நீதித் துறை அலுவலகம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவு பிறப்பித்தது.

ஊழல் எதிா்ப்பு அறக்கட்டளையை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கக் கோரும் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் அந்த வழக்கின் தீா்ப்பு வரும்வரை அமைப்பின் நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்படுவதாக அந்த உத்தரவில் கூறப்பட்டது.

நவால்னி அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டும்; அந்த அமைப்பு ஊடகங்கள் மூலம் தகவல்கள் பரப்புவது, வங்கிகளைப் பயன்படுத்துவது, பொது நிகழ்ச்சிகளை நடத்துவது, தோ்தலில் போட்டியிடுவது போன்றவற்றை சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி அரசுத் தரப்பில் மாஸ்கோ நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், நவால்னியின் இயக்கம் தீவிரவாதப் போக்குடையது என்று தற்போது தீா்ப்பளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com