இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த 16 போ் உள்ளிட்ட 93 சிறைக் கைதிகளுக்கு அதிபா் கோத்தபய ராஜபட்ச பொதுமன்னிப்பு வழங்கியதைத் தொடா்ந்து, அவா்கள் வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.
இலங்கையில் பௌத்த மதத்தினருக்கான பொசன் நோன்மதி பண்டிகையொட்டி அவா்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் 16 பேரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுர சிறைகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாமல் அடைத்து வைக்கப்பட்டிருந்தவா்கள் என்று தெரிவித்தனா்.
10-20 ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று முக்கிய தமிழ் கட்சியான தமிழ் தேசியக் கூட்டணி (டிஎன்ஏ) நீண்ட காலமாக வலியுறுத்தி வருவது நினைவுகூரத்தக்கது.