நேபாளத்தில் லாரி ஆற்றில் கவிழ்ந்து ஆறு பேர் பலி

நேபாளத்தில் லாரி ஒன்று ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஆறு பேர் பலியானார்கள்.
நேபாளத்தில் ட்ரக் ஒன்று ஆற்றில் கவிந்து ஏற்பட்ட விபத்தில் ஆறு பேர் பலியானார்கள்.
நேபாளத்தில் ட்ரக் ஒன்று ஆற்றில் கவிந்து ஏற்பட்ட விபத்தில் ஆறு பேர் பலியானார்கள்.

காத்மாண்டு: நேபாளத்தில் லாரி ஒன்று ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஆறு பேர் பலியானார்கள்.

இதுதொடர்பாக காவல்துறை அறிக்கைகையினை மேற்கோள் காட்டி 'தி ஹிமாலயன் டைம்ஸ்' செய்தித்தாளில் வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

சனிக்கிழமையன்று நேபாளத்தின் லாம்ஜுங் மாவட்டத்தில் உள்ள பேசிஷஹர் என்னும் இடத்தில் இருந்து மனங் மாவட்டதிற்கு லாரி ஒன்று, ஓட்டுநர், துணை ஓட்டுநர் உள்ளிட்ட எட்டு பேருடன் சென்று கொண்டிருந்தது.

அப்போது கோட்ரோ என்னும் இடத்திற்கு அருகில் வந்தபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மர்ஷ்யங்காடி ஆற்றில் கவிழ்ந்தது. சுமார் 50 மீட்டர்கள் வரை ட்ரக் நீரின் உள்ளே சென்றது.

இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள், ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.   

மேல் சிகிச்சைக்காக லாம்ஜுங் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஐவரில் மேலும் இருவர் சனிக்கிழமை மாலையும், அங்கிருந்து பரத்புர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட மூன்று வயது சிறுவன் தியோன் குருங் சனிக்கிழமை இரவும் மரணமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தெடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com