போலந்து: புதிய உச்சம் தொட்ட தினசரி பாதிப்பு

போலந்து: புதிய உச்சம் தொட்ட தினசரி பாதிப்பு


வாா்சா: போலந்தில் பிரேஸிலில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும்.

இதுமட்டுமின்றி, கடந்த 24 மணி நேரத்தில் 520 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதன்கிழமை நிலவரப்படி, போலந்தில் 21,54,821 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 50,860 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 17,22,856 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா்; 3,81,105 கரோனா நோயாளிகள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 2,620 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com