இலங்கையில் நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ள மாகாணத் தோ்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்த அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மூத்த அமைச்சா் எஸ்.எம். சந்திரசேனா கூறியதாவது:
9 மாகாணத் தோ்தல்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடா்பாக, அனைத்து அரசியல் கட்சிகளுடன் அரசு விரிவான ஆலோசனை நடத்தும் என்றாா் அவா்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கடந்த வாரம் நிறைவேற்றிய தீா்மானத்தில், மாகாணத் தோ்தல்களை கூடிய விரைவில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.