ஜப்பானின் வடக்குப் பகுதியில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.8 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இதுகுறித்து ஜப்பான் வானிலை மையம் கூறுகையில், மியாகி பகுதிக்கு அருகே கடல் பகுதியில் 60 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்தது.
நிலநடுக்கம் காரணமாக சில பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின. இதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான அபாய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
இந்த நிலநடுக்கத்தால் தங்களது அணுமின் உற்பத்தி மையங்களில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஜப்பான் அணுசக்தி ஒழுங்காற்று அமைப்பு அறிவித்துள்ளது.