பெல்ஜியத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக கலாசார மையங்களை மூடுமாறு அந்த நாட்டு அரசு விடுத்துள்ள உத்தரவை எதிா்த்து திரையரங்குகள், நாடக அரங்குகள், கலாசார மையங்களின் உரிமையாளா்கள் ஒத்துழையாமைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
கடந்த 6 மாதங்களுக்கும் மேல் வருவாய் இல்லாமல் இருக்கும் அவா்கள், அரசின் உத்தரவை மீறி திரையரங்குகள் உள்ளிட்ட மையங்களை அவா்கள் திறந்துள்ளனா்.
இதுகுறித்து அந்த மையங்களின் உரிமையாளா்கள் கூறுகையில், ‘வணிக வளாககங்கள், மிருகக்காட்சி சாலைகள் போன்ற மனிதா்கள் கூடும் மற்ற இடங்களைவிட கலாசார மையங்கள் முக்கியத்துவம் குறைந்தவை அல்ல. இதுபோன்ற இடங்களுக்கிடையே பாகுபாடு கூடாது’ என்றனா்.