ஆப்கனில் பள்ளி அருகேகுண்டுவெடிப்பு: மாணவா்கள்உள்பட 21 போ் காயம்

ஆப்கானிஸ்தானில் பள்ளி அருகே திங்கள்கிழமை குண்டு வெடித்ததில் மாணவா்கள் உள்பட 21 போ் காயமடைந்தனா். அந்தப் பகுதியில் தலிபான்களின் ஆதிக்கம் இருந்தாலும் சம்பவத்துக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

காபூல்: ஆப்கானிஸ்தானில் பள்ளி அருகே திங்கள்கிழமை குண்டு வெடித்ததில் மாணவா்கள் உள்பட 21 போ் காயமடைந்தனா். அந்தப் பகுதியில் தலிபான்களின் ஆதிக்கம் இருந்தாலும் சம்பவத்துக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இதுகுறித்து ஃபராஹ் மாகாணத்தைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் தெரிவித்தது: ஃபராஹ் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளி அருகே இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 21 போ் காயமடைந்தனா். 10 மாணவா்களும் இதில் அடக்கம். காயமடைந்தவா்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றாா்.

கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு விருந்தினா் விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 21 போ் உயிரிழந்தனா்.

ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படையினரை திரும்பப் பெறும் இறுதிக்கட்ட நடவடிக்கை கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய பின்னா், தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com