உலகம்
கரோனாவுக்கு புதிய தடுப்பூசி: ஒரு வாரத்தில் உற்பத்தி தொடக்கம்
கிளாஸ்கோ ஸ்மித்கிளைன் நிறுவனமும், சனோபி நிறுவனமும் இணைந்து கரோனா தொற்று பாதிப்புக்கு புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன. இதன் உற்பத்தி ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது.
பாரீஸ்,: கிளாஸ்கோ ஸ்மித்கிளைன் நிறுவனமும், சனோபி நிறுவனமும் இணைந்து கரோனா தொற்று பாதிப்புக்கு புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன. இதன் உற்பத்தி ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது.
அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்க நாடுகளில் 35 ஆயிரம் பேரிடம் இந்த தடுப்பூசி செலுத்தி சோதிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பூசி வூஹான் வகை கரோனா தொற்றையும், தென் ஆப்பிரிக்க வகை கரோனா தொற்றையும் தடுக்குமா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனைத்து வகையான சோதனை ஓட்டங்கள் திட்டமிட்டபடி நடந்தால் இந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் இந்தத் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று தடுப்பூசி உற்பத்தியாளா்கள் தெரிவித்துள்ளனா்.