ஆப்கனில் பள்ளியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான கோஸ்டில் உள்ள மதப்பள்ளியில் கையெறி குண்டு திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. 15 பேர் காயமடைந்தனர்.
இதையும் படிக்க- டெக்ஸாஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: மாணவர்கள் படுகாயம்
உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக காபூலில் உள்ள மசூதி அருகே ஞாயிற்றுகிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 12 பேர் பலியானார்கள். 32 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.